வவுனியா மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக எரிபொருள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதன்பொருட்டு, பொதுமக்கள் தமது வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் குளிர்பானம் வழங்கப்பட்டது.
இதேவேளை இச்செயற்பாடு காரணமாக அங்கிருந்தவர்கள் அதனை பெற்று மகிழ்ச்சியுடன் பருகி, எரிபொருளுக்காக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்