நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

<!–

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு! – Athavan News

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளனர்.

சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதியும் பிரதமரும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *