உணவுப் பஞ்சம் ஏற்படுமா? விவசாய அமைச்சு விளக்கம்

கொழும்பு, ஜூன் 17: சிறுபோகத்தில் வழமையாக பயிரிடப்படும் ஐந்து லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், தற்போது 475,000 ஹெக்டேயர்  நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அறுவடை முறையாக கிடைக்கப்பெற்றறால், எதிர்காலத்தில் நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படாது என்று அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் தற்போதும் சிறுபோகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பை உரியவாறு அடையாளம் கண்டு அவற்றுக்கு உரத்தை வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த விவசாய சங்கத்தின் தலைவர் உபாலி ஏக்கநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக பதிலளித்த விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா சிறுபோகத்திற்கு அவசியமான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *