“அம்மா ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை“ – தாயாரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் அண்ணன்!

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் தாயின் மூத்த மகன், தனத அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் அம்மா தன்னைவிட தம்பி மீதுதான் அதிகமாக பாசம் காட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வீட்டில் இருந்து தம்பியை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியேறியதாகவும் இதன்போது, எங்கே போகிறீர்கள் என கேட்டதற்கு அவரேதும் பதிலளிக்காமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான சிறுவனின் தாய் நேற்று முன்தினம் (15) இரவு சிறுவனை களனி ஆற்றில் வீசி விட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

எனினும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *