பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்வைத்துள்ள கோரிக்கை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குமாறு நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், விடைத்தாள்களை வெற்றிகரமாக மதிப்பீடு செய்வதற்கும் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதியும் மதிப்பீட்டு கடமைகளில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் கோரியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *