முதியங்கன விகாரைக்கு அருகில் தீப்பரவல்

பதுளை – முதியங்கன விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பதுளை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு வரப்பட்ட பட்டாசு தொகை குறித்த வீட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *