அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி! சுற்றறிக்கை வெளியானது

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரியும் தீர்மானத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *