அரசுக்கெதிராக யாழில் அணி திரண்ட அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கம்

யாழில் அரசுக்கெதிரான போராட்டமொன்றை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ளது.

ஆசிரியர், மாணவர், பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, 24 வருட ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவசக் கல்வியை இராணுவமயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்துச்செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக காலை 10.30 க்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *