கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் போராட்டம்!

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர்.

முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு இடையில் கடந்த 3 நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இன்று முழங்காவில் பகுதிக்கான அரச பேருந்து சேவையை இடைநிறுத்தி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதவிடத்து, எதிர்வரும் 4ஆம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி சாலையிலிருந்து சேவைகளை இடைநிறுத்தி தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் அக்கராயன், ஜெயபுரம் ஊடாக முழங்காவில் பகுதிக்கான சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *