மீண்டும் அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசம்- பன்ஜின் நகரின் வடக்கு மற்றும் வடமேற்கே 276 கி.மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 8.08 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

குறித்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கு பின்னர் அருணாசல பிரதேசத்தில் ஏற்படும் 3ஆவது நிலநடுக்கம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *