கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

<!–

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம் – Athavan News

கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை இணையவழிக் கற்பிப்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *