முல்லைத்தீவு, பெரியகுள பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பேருந்து நேற்றுக் காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நெடுங்கேணியில் இருந்து வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எதுவித காயங்களுக்கும் உள்ளாகாத நிலையில் மோட்டார் சைக்கிள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.