திருமலையில் ஹைஏஸ் வாகனம் விபத்து;நால்வர் படுகாயம்!

திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் ஹைஏஸ் ரக பயணிகள் வாகனம் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் வாகனத்தில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டகளப்புக்குச் சென்ற பயணிகள் வாகனமும், திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள்.

வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *