யாழ் வந்த நிமால் சிறிபால டி சில்வாவை வரவேற்ற டக்ளஸ்

யாழ், ஜுன் 18

விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகைதந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்து வரவேற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்த ஆராய்வதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *