இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும்: அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியா,ஜுன் 18

இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் என்றும், டேட்டா விலை உலக நாடுகளில் உள்ளதைவிடக் குறைவாக இருக்கும் என்றும் இந்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கி விடும் எனத் தெரிவித்தார்.

அடையாளமில்லா அழைப்புகள் சிக்கலைத் தீர்க்க, ஒரு ஒழுங்குமுறை உள்ளதால் பெயரை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். 72 ஜிகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் நாள் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *