மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம்இன்று ஆரம்பம்!!

மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம்இன்று ஆரம்பம்!!

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும், மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது இன்று 19.06.2022 திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 24.06.2022 திகதி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவத்துடன் ஆலய உற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.

திருச்சடங்கு உற்சவ காலத்தில் தினமும் பகல் பூசைகள் பி.ப 2.00 மணிக்கும், இரவு பூசைகள் நள்ளிரவு 2.00 மணிக்கும் இடம்பெறுவதுடன், 22.06.2022 திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கல்யாணக்கால் வெட்டும் வைபவம் வீதி வலமாக இடம்பெறவுள்ளதுடன், மறுநாள் 23.06.2022 திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு எரிக்கில வெட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

உற்சவ கால பூசை வழிபாடுகள் அனைத்தும் ஆலய பூசகர்களினால்
நிகழ்த்தப்படவுள்ளதுடன், புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மனின் அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *