கொரோனா இன்னும் விலகவில்லை! மக்களுக்கு சுகாதாத்துறை எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் இன்னமும் சமூகத்தை விட்டு விலகவில்லை. எனவே முதியோர் மற்றும் நீண்ட கால நோயாளர்கள் நான்காவது தடுப்பூசி பெற்றுக்கொள்வது அவசியம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்தாவது,

மன்னாரில் இம்மாதம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் கடந்த 15 ஆம் திகதி மாத்திரம் 6 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்று இன்னமும் மக்களை விட்டு அகலவில்லை.

ஆகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டகால நோயாளர்கள் கட்டாயமாகவும் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத் தின் அடிப்படையிலும் தமது நான்காவது பூஸ் டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது நலம் என்றார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *