யாழ்ப்பாணத்தில் அங்கஜன் இராமநாதனின் எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளதாக கூறப்படும் கதைகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தனக்கு உரிமையாக நாட்டின் எப்பாகத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை. அவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையம் இருப்பதை யாரேனும் நிரூபித்தால் உடனடியாக பதவி விலக தயாராக உள்ளேன் எனவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழிலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பிற செய்திகள்

