ஜனாதிபதி – ஆளும் கட்சியின் எம்.பிக்களிடையே இன்று சந்திப்பு

கொழும்பு, ஜுன் 20

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது, இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. அதேநேரம், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் 21ஆம் திருத்தச்சட்டம் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *