ஆறுமாதக் குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்க அமெரிக்கா அனுமதி!

அமெரிக்காவில் ஆறுமாதக் கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் முறையாக கிடைக்கும். இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆலோசகர்கள் குழுவினர், ஆறு மாத வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் பரிந்துரைத்தனர்,

ஐக்கிய அமெரிக்கா. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மொடர்னா தடுப்பூசி அளவு மற்றும் ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைஸர்-பயோன்டெக்கின் தடுப்பூசி அளவை அங்கீகரித்துள்ளது.

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைஸரின் தடுப்பூசி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை ஐக்கிய அமெரிக்கா. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், அங்கீகரிக்கும் அதே வேளையில், அவற்றை யார் பெற வேண்டும் என்பதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தான் தீர்மானிக்கிறது.

அமெரிக்கா நோய் தடுப்புத் துறை தலைவர் ரோசெல் வாலென்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், ‘லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆர்வமாக உள்ளது எங்களுக்கு தெரியும். அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம்’என கூறினார்.

ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலை அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.

கொரோனா வைரஸை தடுப்பதில் இது ஆக்கப்பூர்வமான முடிவு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *