இரட்டைக் கொலை: ஹசித சமந்த முஹாத்திரம் விடுதலை

கொழும்பு, ஜூன் 20

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஹசித சமந்த முஹாத்திரம் எனப்படும் ´சர்ப்யா´ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கினார்.

1999 ஆம் ஆண்டு சப்ரகமுவ முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரை கலவான பிரதேசத்தில் வாகனத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ´சர்ப்யா´ என அழைக்கப்படும் ஹசித சமந்த முஹாத்திரம் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *