வவுனியாவில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதிய விபத்து!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நோக்கிச்சென்ற சொகுசு வாகனம், டிப்பர் வாகனம் மற்றும் பாரவூர்தி (லொறி) ஆகியன ஒன்றன் பின் ஒன்று பயணித்த வேளையில் திடீரென வவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு அருகில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இவ் விபத்தில் சிவபாலன் (வயது 46) என்ற பாரவூர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *