ரணில் வந்தும் நாட்டுக்கு நல்லது நடக்கவில்லை! கோட்டாவுக்கு எடுத்துரைப்பு

மக்கள் முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் சூடான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததோடு, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நாட்டுக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்சிக்குள் தனது தலைமையை பாதுகாக்க பிரச்சினைகளில் இருந்து தப்பித்து ஓடுவதையே வாடிக்கையாக கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திலும் அவ்வாறே நடந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி நம்பிக்கை கொண்ட பிரதமருக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன குழு தீர்மானித்த போதிலும், பொதுஜன பெரமுனவின் மீது பிரதமருக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன பெரமுனவின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் பதவி வழமை போன்று இன்றும் நடுவில் பிரதமர் கூட்டத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் இடையிலான நெருக்கடியை தீர்த்து வைப்பதாகவும், நாளை காலை பாராளுமன்றத்தில் பிரதமரை சந்திப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

போராட்டங்களில் ஊடுருவிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *