அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் பல விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த சரத்துகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்ச நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அவர் குறிப்பிட்டுள்ளார்.