நாடாளுமன்றில் இருந்து சஜித் அணியினர் வெளிநடப்பு!

நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (செவ்வாய்க்கிழமை) சபையில் அறிவித்தார்.

நாட்டில் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு நாடாளுமன்ற அமர்வில் உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் தாம் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *