மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தும் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை 

குறிப்பாக தமக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வேறும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு மண்ணெண்ணை பெற்றுக் கொள்வதற்காக வருவதனால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மண்ணெண்ணை பெற்றுக் கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களிடையே அடிக்கடி மோதல்கள் கைகலப்புக்களை அவதானிக்க முடிகின்றது.

பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர் அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் கிரமமான அடிப்படையில் ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டியது அவசியமானது என மக்கள் கோரிக்கை விடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *