ரயில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் அழைப்பு!

30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊதியங்கள் மீதான அதிகமான கோரிக்கைகள், அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுப்பதை கடினமாக்கும் என்று பிரதமர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்காக நடந்த கடைசிப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நெட்வொர்க் ரெயிலில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் 13 ரெயில் நடத்துநர்கள் நள்ளிரவு முதல் வெளிநடப்பு செய்தனர்.

ஆர்.எம்.டி. இரயில் தொழிற்சங்கம், முதலாளிகள் ஊதியம் தொடர்பாக சுதந்திரமாக பேச்சுவார்த்தை நடத்துவதை அரசாங்கம் தடுப்பதாக குற்றம் சாட்டியது.

திங்கள் மாலை இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து முழுவதும் சேவைகள் பாதிக்கப்படத் தொடங்கின, தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஐந்தில் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள ரயில்கள் முக்கியமாக பிரதான வழித்தடங்களில் இயங்கும் மற்றும் சுமார் 11 மணி நேரம் மட்டுமே இயக்கப்படும், தேவைப்பட்டால் மட்டுமே ரயில் மூலம் பயணிக்குமாறு நெட்வொர்க் ரயில் பயணிகளை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *