யாழ். கே.கே.எஸ். வீதியில் கடும் வாகன நெரிசல்; போக்குவரத்து ஸ்தம்பிதம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பமடைந்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் குவிந்த மக்களாலேயே குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் சுமார் 100 மீற்றர் தூரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேலைக்கு சென்று வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பொலிஸார் கடைமையில் ஈடுபட்டு போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *