யாழில் அரசியல்வாதிகளின் வருகைக்காக காத்திருக்கும் துவிச்சக்கர வண்டிகள்!

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் ஊடாக பனை தென்னை உற்பத்தியாளர்களிற்கான ஊக்குவிப்பிற்காக வழங்குவதற்கு 2021ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டில் இருந்து 40 துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் இளவாளையில் உள்ள ப.தெ.வ. சங்கத்திடம் கையளிக்கப்பட்டபோதும், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதனால் 40 துவிச்சக்கர வண்டிகளும் 5 மாதமாக காவல் கிடக்கின்றன. இதனை வழங்குவதில் அரசியல் போட்டியே காரணம் எனவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

ப.தெ.வ.சங்கத்தின் களஞ்சியத்தில் துவிச்சக்கர வண்டிகள் உள்ளபோதும், அவை இன்றுவரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பொறுப்பிலேயே உள்ளது.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காலத்திலும் இவ்வாறு 40 துவிச்சக்கர வண்டிகள் பயனாளர்களிடம் கையளிக்கப்படவில்லை.

இதுதொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்,

இந்த 40 துவிச்சக்கர வண்டிகளும் களஞ்சியத்தில் இருப்பது உண்மை எனவும், இவற்றை விரைவில் வழங்க ஆவண செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *