அடுத்த ஆண்டில் சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்படும் – ஜிதேந்திர சிங்

அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சந்திரயான் 3 திட்டத்தை மெய்யாக்குவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்புமுறைகளின் நடைமுறையாக்கம், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் வரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன.

எனினும் வீடுகளில் இருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொதுமுடக்கத்தின்போதும் மேற்கொள்ளப்பட்டன.  தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல் சந்திரயான் 3 திட்டப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *