இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனை!

அவுஸ்ரேலியா அணியை சொந்த மண்ணில் தோற்கடித்து, இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனையை படைத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்ரேலிய அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன் பின்னர் 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா, அனைத்து விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஒரு போட்டி மீதமிருக்க 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற ரீதியில் கைப்பற்றியது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, சொந்த மண்ணில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *