இலவச கல்விக்காக கடந்த காலங்களில் போராடினோம், இன்றோ இணையவழி கல்விக்காக மரமேறி போராடுகின்றோம்.
‘மரத்திலேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது’ என்ற முதுமொழியானது. இலங்கை வாழ் மாணவச் செல்வங்களுக்கே தற்போது சாலப் பொருந்தியுள்ளது.
உலக வல்லரசு நாடுகளையே உலுக்கிப் பார்த்து கொரோனா எனும் கொடிய தொற்று நோய். இதற்கு இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கா? தமிழர் தாயக பகுதிகளும் கடந்த பல தசாப்தங்களாக எதிர்கொண்ட யுத்த சுவடுகளை மெல்ல மறந்து, கல்வி, பொருளாதாரம், சாதனை என தமது வாழ்வாதாரத்தை தலைநிமிர்த்தி வருகின்ற நிலையில், பல மாணவ செல்வங்களின் கனவுகளை சிதைக்கும் சக்தியாக கொரோனா வைரஸ் உருமாறிவிட்டது.
தமிழர்கள் எங்கே நம்மைவிட சிறந்து விடுவார்களோ! என்ற சிங்கள கயவர்களின் வஞ்சக தந்திரத்தால், தெற்காசியாவில் தலை சிறந்து விளங்கிய யாழ் நூலகம் தமிழ் இன மரபோடு மண்ணோடு மண்ணாக்கப்பட்டது.
எனினும் அவர்களது கனவு நிறைவேறியதா? எரிந்த சாம்பலிலும் மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவையை போல, எந்த பெருந் துயர் வந்தபோதிலும் எதிர்த்து தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.