நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே மக்கள் கூட்டம் தினந்தோறும் அலை மோதுகின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து வீதிகளில் ஆட்டோக்காகக் காத்திருந்து மணிக்கணக்கில் அலுத்துப் போகும் மக்களுக்காக தற்போது புதிய வடிவில் றிச்சா வண்டியொன்றை மூதூர் இளைஞனொருவர் உருவாக்கியுள்ளார்.
எரிபொருளுக்காக பல மணித்தியாலங்களை வீணாக்குவதை விட தனது பாவனைக்காவது பயன் படுத்தலாமே என குறித்த வண்டியை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


பிற செய்திகள்

