16 மாத இடைவெளிக்குப் பிறகு கப்பல் சர்வதேச பயணங்கள் மீண்டும் ஆரம்பம்!

16 மாத இடைவெளிக்குப் பிறகு ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் கப்பல் சர்வதேச பயணங்களை, இங்கிலாந்திலிருந்து மீண்டும் தொடங்க முடியும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், பிரித்தானிய துறைமுகங்களுக்கு வரும்போது தனிமைப்படுத்த வேண்டியதில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வருகையாளர்களுக்கு தனிமைப்படுத்தும் விதிகளை தளர்த்தும் திட்டத்தின் இது ஒரு பகுதியாகும்.

பயண முகவர் நிலையங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள், துறைமுக ஆபரேட்டர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் பயணங்களை மீள ஆரம்பிப்பதன் மூலம் பயனடைகின்றன என்று ஒரு தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பயணங்களை மே முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *