ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படும் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி!

கொடிய மலேரியா நோய்க்கான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது.

மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2019இல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுதாகார அமைப்பு நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில், முதல் முறையாக, ஆபிரிக்க குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி, செலுத்தப்படவுள்ளது.

‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *