தருமபுர பகுதியில் திடீரென சுற்றிவளைத்த அதிரடிபடை

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையின்போது பாதுகாப்புக் கடமைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதள் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

அதனையடுத்து 07.102021 இன்றையதினம் தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இனைந்து குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இச்சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் 04, வாள் 01, இடியன் துப்பாக்கி 01, சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கசிப்பு விற்றபனையிலிடுபட்ட பெண் உட்பட இவ்சுற்றிவளைப்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தருமபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிசெர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *