சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு – ஜோன்ஸ்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம் திகதிஅறிவித்தல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையுடுத்து, தம்மை கைது செய்வதைத் தவிர்க்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *