
கொழும்பு பத்தரமுல்லை இம்பீரியல் விடுதியில் நடைபெற்ற ‘சீர்திருத்தத்திற்கான கூட்டு’ என்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஓமல்பே சோபித தேரர் உட்பட மதத்தலைவர்கள் கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் உரையாற்றிய எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,
நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்” காலிமுகதிடல் போராட்டத்தை நாம் கொள்கை ரீதியாக ஆதரிக்கிறோம். ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை, காலிமுக திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம்.
ஜனாதிபதி கோதாபய, இதைவிட பலமாக பாதுகாப்பு செயலாளர் கோதாபயவாக இருந்த போதே, “கோதா-கோ-ஹோம்” என கோஷம் எழுப்பி போராடியவர்கள், நாங்கள் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்

