எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுகதார ஊழியர்கள்

எரிபொருளை வழங்குமாறு தெரிவித்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் எரிபொருளப் பெற்றுத் தருமாறு கோரி புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக புத்தளம் குருனாகல் பிரதான வீதியை மறித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வெள்ளிக்கிழமையன்று தமக்கு விஷேட முறையில் புத்தளம் சிறாம்பியடி எரிபொருள் நிலையத்தில் காலை 7 மணிமுதல் எரிபொருளைத் தருவதாக புத்தளம் மாவட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்த நிலையில் 10 மணியாகியும் தமக்கான எரிபொருள் வழங்கப்படவில்லையென தெரிவித்து புத்தளம் குருனாகல் பிரதான வீதியை மறித்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு புத்தளம் பொலிஸார் வருகைத் தந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கலந்துரையாடி எரிபொருளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் குறித்த வீதியினூடாக செல்லும் வாகங்களை வேறு வீதியினால் செல்லுமாறு கோரி போக்குவரத்து பொலிஸாரினால் வாகனங்களை திருப்பியனுப்பியதைக் காணக்கூடியதாக இருந்தது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *