நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று மாலை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் யாழில் சில நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்து பௌத்த கலாச்சார பேரவையின் அழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

