இலங்கையில் பிறந்து மூன்றே நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை – வெலிபென்ன, பெலிவத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாகொடை வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின் வீடு திரும்பிய நிலையில் குறித்த குழந்தை உயிரிழந்தது.
இதேவேளை உயிரிழந்த சிசு, பெற்றோருக்குப் பிறந்த முதல் குழந்தை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.