இருவேறு தடுப்பூசி பெற்ற மருத்துவருக்கும் கொரோனா!

இலங்கையில் இருவேறு தடுப்பூசி பெற்ற மருத்துவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளரும், முன்னாள் சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஜயருவன் பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் ஜயருவன் பண்டார முதல் சுற்றில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியையும், இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியையும் பெற்றவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் தொற்று உறுதியாகியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *