யாழில் நேற்று மாத்திரம் மூவர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் மூவர் சாவடைந்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *