வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் நீதி வேண்டி அவர்களின் உறவினர்களால் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகமுன்றலில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்பபாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு தமக்கான நீதி வேண்டி கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதேவேளை இந்த போராட்டம் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரவலாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது