நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முன்பு போல தீவிரமாக இல்லாத காரணத்தால் உறுப்பினர்கள் பரிசோதனை சான்றிதழ் இன்றி சபைக்கு வர அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை கடந்த ஜுலை மாதம் கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்கட்சிகள் அமளியால் திட்டமிட்ட தினத்திற்கு முன்னதாகவே முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *