யாழ். பொது நூலகத்தில் இந்தியன் சென்ரலில் மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொது நூலக பிரதம நூலகர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், அப்துல் கலாமின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, கொரோனா இடர்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.







