எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீன்பிடி அலுவலக தோட்டத்திற்கு அருகில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
ஒருவர் மற்றவரை தள்ளும் போது சிறிய நீரோடை ஒன்றில் விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், குறித்த நபர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் பாணந்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





