தாய்வானில் தீ விபத்து: 46 பேர் உயிரிழப்பு- 41 பேர் காயம்

தாய்வானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்வானின் காசியுங் நகரிலுள்ள வணிக வளாகத்துடன் கூடிய 13 அடுக்குமாடிகளை கொண்ட கட்டடத்தில் நேற்று, பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த விபத்தில் சிக்கி இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இதன்போது தீயணைப்புப் படையினர், கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்;. 41 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்; என அஞ்சப்படுகிறது.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணை ஆரம்பித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *