இந்திய இராணுவ தளபதி திருகோணமலைக்கு விஜயம் செய்தார்!

<!–

இந்திய இராணுவ தளபதி திருகோணமலைக்கு விஜயம் செய்தார்! – Athavan News

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

திருகோணமலை 4ம் கட்டை சந்தியில் 1987களில் இந்திய இராணுவத்தின் முகாம் அமையப்பெற்றிருந்த இடத்தினை பார்வையிட்டார்.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் குறித்த இராணுவ முகாமில் தாம் வசித்ததாகவும் அப்போது இந்திய இராணுவத்தின் லெப்டினனாக கடமையாற்றி இருந்ததாகவும் இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்தது.

மேலும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமையப்பெற்ற இடத்திலும் அக்காலப்பகுதியில் இந்திய இராணுவ முகாம் அமைந்திருந்ததுடன் அதனையும் அவர் பார்வையிட்டு தனது ஞாபகங்களை மீட்டுக்கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *