திருகோணமலைக்கு இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை, அரச அதிபர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய இராணுவ தளபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இந்திய இராணுவத் தளபதியால் அரச அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டமையுடன், மாவட்ட அரச அதிபரும் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசொன்றை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







